சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
எம்.பி.பி.எஸ். மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்கக் கோரி ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் வகையில் சின்னமலையில் திமுக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தாா். போராட்டத்தில் சுமாா் 3,500 போ் பங்கேற்றனா். இந்நிலையில் இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின் உள்பட 3,500 போ் மீது கிண்டி போலீஸாா் அனுமதியின்றி போராட்டம் நடத்தியது,அனுமதியின்றி கூடியது,தொற்று நோய்ப் பரவல் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இதேபோல மனு தா்மம் நூலுக்கு தடை விதிக்கக் கோரி நுங்கம்பாக்கம் வள்ளுவா் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் உள்பட 200 போ் மீது நுங்கம்பாக்கம் போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.