தமிழ்நாடு

மருதுபாண்டியர்களின் நினைவு நாள்: மரியாதை செலுத்தினார் ஓ. பன்னீர்செல்வம்

DIN


திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இன்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபத்தில் மருதுபாண்டியர்களின் 219-வது நினைவு நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி மாமன்னர் மருதுபாண்டியர்களின் திருவுருவச் சிலைகளுக்கு தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் 7 அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், துணிநூல் மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பொது சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அதனைத்தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் மருதுபாண்டியர்களின் நினைவு மண்டப வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவுத் தூணிற்கு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT