தமிழ்நாடு

ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டப் பணிகளை முதல்வர் விரைவில் துவக்கி வைப்பார்: கே வி ராமலிங்கம்

DIN

ஈரோடு மாநகரில் நடைபெற்றுவரும் ரூ.500 கோடி மதிப்பிலான ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளன. எனவே அடுத்த மாதம் முதல்வர் இத்திட்டத்தைத் துவக்கி வைக்க உள்ளார் என்று ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர் மற்றும் ஈரோடு மேற்கு தொகுதி எம் எல் ஏ கே வி ராமலிங்கம் தெரிவித்தார். 

ஈரோடு மாணிக்கம் பாளையம் பகுதியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் தென்னரசு எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்ட ரேஷன் கடையை அவர் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி சார்பில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன .ஈரோடு மாநகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தினசரி குடிநீர் வழங்கும் வகையில் பவானி அடுத்த ஊராட்சிக்கோட்டை பகுதியிலிருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொண்டுவர அரசு திட்டமிட்டது. 

இதற்காக மத்திய மாநில அரசுகள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ 500 கோடி அளவிலான திட்டப் பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. தற்போது திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று நிறைவடையும் தருவாயில் உள்ளன. இத்திட்டத்தின் கீழ் சுமார் 1.90 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கத் திட்டமிடப்பட்டது. தற்போது இதுவரை 1.05 இலட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன .இதற்காக தற்போது குடிநீர் பம்ப் செய்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. ஈரோடு சூரியம்பாளையம் மற்றும் இதரபகுதிகளில்  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் புதிதாகக் கட்டப்பட்ட அனைத்து பணிகளும் விரைவு படுத்தப்பட்டுள்ளன .சமீபத்தில் குரானா பிரச்னை காரணமாக வெளிமாநிலங்களிலிருந்து வந்த தொழிலாளர்கள் உங்கள் மாநிலத்துக்குச் சென்று விட்டதால் பணியில் சிறிது சுணக்கம் ஏற்பட்டது.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு அன்றாட வாழ்க்கை முறைகள் நடைபெற்று வருவதால் வெளிமாநில தொழிலாளர்கள் திரும்பி வந்துள்ளனர் .எனவே அனைத்து பணிகளும் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படும். இதேபோன்று ஈரோடு வெளிவட்ட சாலை பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. கொக்கராயன் பேட்டை பகுதியில் இருந்து ரங்கம்பாளையம் சென்னிமலை ரோடு வழியாக ஈரோடு திண்டல் மேடு பகுதியில் பெருந்துறை சாலை உடன் இந்த வெளிவட்ட சாலை இணையும். 

கரூர் ரோடு சென்னிமலை ஈரோடு பூந்துறை ரோடு மற்றும் பெருந்துறை ரோடு  இந்த வெளிவட்ட சாலையால் இணைக்கப் படுவதால் ஈரோடு நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும். கொக்கராயன்பேட்டை படகுத் துறையிலிருந்து நாமக்கல் மாவட்டம் இணைக்கும் இந்த சாலை நாமக்கல் மாவட்டத்திற்குப் போக்குவரத்து சுலபமாக நடைபெறப் பெரிதும் உதவும்.

தென்மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் நேரடியாக கோவைக்கு செல்வதற்கு இந்த சாலை வழியாக பெருந்துறை சாலை அடையலாம். இதேபோன்று பெருந்துறை சாலையில் இருந்து வருபவர்கள் தென் மாவட்டத்திற்கு ஈரோடு நகரில் நுழையாமல் செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இதனால் கனரக வாகனங்கள் பெரிதும் இந்த வெளிவட்ட சாலை வழியாக செல்லும்போதுபோக்குவரத்து நெரிசல் குறைவதோடு மட்டுமல்லாமல் எரிபொருள் செலவும் பெரிதும் குறையும். இந்த சாலை திட்ட பணிகள் ரங்கம்பாளையம் மற்றும் சென்னிமலை ரோடு பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் சிறிது தேக்கமடைந்து இருந்தது.  நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. எனவே அந்த பணிகளும் இன்னும் முப்பது அல்லது நாற்பது தினங்களுக்குள் முடிவடையும்.

முதலமைச்சர் ஈரோட்டுக்கு வரும்போது பீச் சாலை திட்டத்தையும் திறந்து வைக்க வாய்ப்புள்ளது. இதேபோன்று முதலமைச்சர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது ஈரோடு காலிங்கராயன் இல்லத்திலிருந்து திண்டல் மேடு வரை ரூபாய் 300 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க உறுதியளித்தார். அதன்படி அப்பால பணிகளுக்கான டிசைன் வர பெற்றுள்ளது .மண் பரிசோதனைகளும்  பெருந்துறை சாலையில் நிறைவடைந்துள்ளன. இந்த புதிய மேம்பாலம் பணிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட வாய்ப்புள்ளது. இவ்வாறு கேவி ராமலிங்கம் தெரிவித்தார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

SCROLL FOR NEXT