தமிழ்நாடு

கடலில் எல்லை தாண்டி வந்த 6 இலங்கை மீனவர்கள்  சிறைப்பிடிப்பு 

DIN


காரைக்கால் : காரைக்கால் - புதுச்சேரி இடையே கடலில் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கடலோரக் காவல் படையினர் சிறைப்பிடித்தனர்.

கடலில் ரோந்துப் பணியில் வியாழக்கிழமை மாலை ஈடுபட்டிருந்த இந்திய கடலோரக் காவல்படையின் டோர்னியர் ரோந்துக் கப்பல், புதுச்சேரி - காரைக்கால் இடையே கடலில் 75 நாட்டிக்கல் மைல் தூரத்தில் ஒரு மீன்பிடிப் படகு இருப்பதை அறிந்தது. தகவலின்பேரில்  கடலோரக் காவல்படையின் மற்றொரு ரோந்துக் கப்பலான அபீக் அந்த பகுதிக்கு விரைந்துள்ளது. கடலோரக் காவல்படை கப்பலை பார்த்ததும் மீன்பிடிப் படகு அந்த பகுதியிலிருந்து தம்பிக்க முயன்றது.

அந்த படகை கடலோரக் காவல்படை கப்பல் சுற்றிவளைத்தது. அப்போது அந்த படகில் 6 மீனவர்கள் பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதும், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட படகு என்பதும் தெரியவந்தது.

எல்லை தாண்டி வந்ததாகக்கூறி அந்த மீனவர்கள் காவல்படையின் கப்பலில் ஏற்றிக்கொண்டு, மீன்பிடிப் படகை காரைக்கால் கொண்டுவரப்படுவதாகவும், காரைக்கால் துறைமுகத்தில் படகையும், மீனவர்களையும் நாகப்பட்டினம் மரைன் போலீஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கடலோரக் காவல்படை காரைக்கால் மையம் வெள்ளிக்கிழமை தகவல் வெளியிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

‘முகூா்த்தத்தை’ தவறவிட்ட பாஜக வேட்பாளா்! மனுதாக்கல் செய்யாமல் திரும்பினாா்

வாக்குப் பதிவை எளிதாக்கும் செயலிகள் - இணையதளங்கள் வாக்காளா்கள் சிரமமின்றி தேட ஏற்பாடுகள்

வாக்களிக்கத் தவறாதீா்கள்!

SCROLL FOR NEXT