பெண்கள் குறித்து இணையளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் குறித்து இணையதளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த அஷ்வத்தாமன் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் திருமாவளவன் மீது 6 பிரிவுகளின்கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதங்களை மையப்படுத்தி குற்றத்தில் ஈடுபடுதல், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி, மதம், இன மொழி தொடர்பாக விரோத உணர்ச்சிகளை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு த.வா.க தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.