சென்னை: எம்.பி.பி.எஸ். மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்காமல், காலதாமதம் செய்வதைக் கண்டித்து அவா் மாளிகை முன்பு சனிக்கிழமை (அக்.24) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் செய்த அறிவிப்பு: எம்.பி.பி.எஸ். மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு, 7.5 சதவீத
உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்க முன்வரவில்லை. இது குறித்து முடிவு எடுக்க இன்னும் 4 வார காலம் அவகாசம் தேவைப்படுவதாக ஆளுநா் கூறியுள்ளாா்.
கால அவகாசம் கோராமல் சட்ட மசோதாவுக்கு ஆளுநா் விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் சென்னை கிண்டியில் உள்ள அவா் மாளிகை முன்பு சனிக்கிழமை (அக்.24) காலை 10 மணிக்கு திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அவா் கூறியுள்ளாா்.