செங்கல்பட்டு அடுத்த திருவடித் சூரத்தில் உள்ள தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா மற்றும் சகஸ்ரநாம மஹா சண்டிஹோமம் 6 ஆம் நாள் நடைபெற்றது.
விழாவையொட்டி தேவிஸ்ரீ கருமாரியம்மன் அம்மன் சொர்ணாம்மிகை அம்மன் உள்ளிட்ட அம்மன்களுக்குள் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் சகஸ்ரநாம மந்திரங்கள் ஒலிக்க மஹா சண்டிஹோமம் நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் சண்டிஹோமத்தில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். உற்சவ அம்மன் கிரஹ லட்சுமி அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் ஸ்தாபகர் புதிய மதுரைமுத்து ஸ்வாமிகள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.