வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.
வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் 180 கிலோ மீட்டர் தொலைவில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது என்று வானிலை எச்சரிக்கையையொட்டி, நாகை துறைமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை பகல் ஒரு மணி அளவில் 1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.
புயல் உருவாகக்கூடிய மழையுடன் கூடிய வானிலைப் பகுதி ஏற்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் தொலைதூர முன்னெச்சரிக்கையாக இந்த புயல் கூண்டு ஏற்றப்பட்டது.