தமிழ்நாடு

மானாமதுரையில் எஸ்.ஆர்.இ.எஸ் சங்க ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில் நிலையம் முன்பு எஸ்ஆர்இ.எஸ் ரயில்வே தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ரயில்வே தொழிலாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி  வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இந்த ஆண்டு ரயில்வே ஊழியர்களுக்குப் பண்டிகைக் கால போனஸ் வழங்க வேண்டும், ரயில்வே துறையை தனியார் மயமாக்கக்கூடாது, ரயில்வே காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,பஞ்சப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ரயில்வே துறை தொடர்பான பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ரத்து செய்ததைக் கண்டித்தும் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.ஆர்.இ.எஸ் மத்திய சங்க ஒருங்கிணைப்பாளர் ஜி.ராஜாராம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைககளை விளக்கி சங்கத்தின் மானாமதுரை கிளை நிர்வாகிகள் சகாதேவன், மணிவண்னன்,  குமரேசன், ராஜா, சரவணன், சந்தோஷ், மோகன், நாகரெத்தினம் உள்ளிட்டோர் பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT