சென்னை: முதல்வரை சந்திக்க தனக்கு அனுமதி மறுக்கபட்டதாக அதிமுக எம்.எல்.ஏ கூறியுள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரசுமுறைப் பயணமாக புதுகோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள முதல்வர் பழனிசாமி வியாழனன்று பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
அப்போது மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் அவரைச் சந்தித்தனர்.
இந்நிலையில் முதல்வரை சந்திக்க தனக்கு அனுமதி மறுக்கபட்டதாக அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி கூறியுள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி கூறுகையில், ‘மற்ற எம்.எல்.ஏக்கள் சந்திக்க அனுமதித்த நிலையில் தன்னை மட்டும் முதல்வரைச் சந்திக்க அனுமதிக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.