தமிழ்நாடு

வாரத்திற்கு ஐந்து நாள் மட்டுமே சேலம்-சென்னை விமான சேவை: ட்ருஜெட் விமான நிறுவனம் அறிவிப்பு

DIN


வாரத்தின் அனைத்து நாள்களிலும் இயக்கப்பட்டு வந்த சேலம்-சென்னை விமான சேவை வரும் 25 ஆம் தேதியில் இருந்து நிர்வாக காரணங்களுக்காக, வாரத்திற்கு ஐந்து நாள் சேவையாக மாற்றப்பட்டு இருப்பதாக விமான நிறுவன மேலாளர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 25 ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை தவிர மற்ற ஐந்து நாள்களில் சேலம்-சென்னை விமான சேவை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். 

விமான புறப்பாடு மற்றும் விமான வருகை நேரத்திலும் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி சென்னையிலிருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு 8.15மணிக்கு வந்து சேரும், மறுமார்க்கமாக  சேலத்தில் இருந்து 8.35 மணிக்கு புறப்பட்டு சென்னையில் 9.35 மணிக்கு விமானம் தரையிறங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான போக்குவரத்து நாள்களில் கடப்பா, விஜயவாடா, மைசூர் மற்றும் பெல்காம் உள்ளிட்ட ஊர்களுக்கு இணைப்பு பயணம் கொடுக்கப்படும் எனவும் ட்ருஜெட் விமான நிறுவன மேலாளர் பிரசன்னா தெரிவித்துள்ளார் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT