செங்கல்பட்டை அடுத்த திருவடிச்சூலத்தில் உள்ள 51 அடி உயரத்தில் எழுந்தருளி இருக்கும் தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி 4ஆம் நாள் செவ்வாய்க்கிழமை இரவு சகஸ்ரநாம மஹா சண்டிஹோமம் நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்புப் பூஜைகள் ஹோமபூஜைகள் பூர்ணாக்ஷதி மஹா தீபாராதனை நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து அம்மாளின் அருளைப் பெற்றனர்.
பின்னர் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நாட்டரசன் கோட்டையில் உள்ள கண்ணனுடைய நாயகி கண்ணத்தாள் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கோயில் ஸ்தாபகர் புதிய மதுரை முத்துஸ்வாமிகள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.