நான் எந்த சட்டத்தை மீறவில்லை. என் மீது தவறாக வழக்குப் பதிந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று வீரப்பனின் மகள் வித்யாராணி பேட்டி அளித்துள்ளார்.
எனது தந்தை வீரப்பன் நினைவு தினத்தையொட்டி அவரது சமாதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அஞ்சலி செலுத்திய போது, சமூக இடைவெளியைப் பின்பற்றி சட்டத்திற்கு உட்பட்டு அஞ்சலி செலுத்தினேன்.
தற்போது தன்மீது கரோனா தொற்று காலத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக கொளத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் செய்தித்தாள்கள் மூலம் அறிந்தேன். நான் எந்த சட்டத்தையும் மீறவில்லை. என் மீது தவறாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்தார்.