தமிழ்நாடு

மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு விவகாரத்தில் விரைவில் ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார்: அமைச்சர் ஜெயக்குமார்

DIN

சென்னை: மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு விவகாரத்தில் விரைவில் ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார் என்று அவரை சந்தித்த பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இன்னும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பான வழக்கிலும், 'ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்வரை தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது' என தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து அமைச்சர்கள் இன்று வலியுறுத்தியுள்ளனர். 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்‌, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார்‌, சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்‌, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்‌ ஆகியோர் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினர். 

சந்திப்பு முடிந்த பின்னர் அமைச்சர் ஜெயக்குமார்‌ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘7.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் எங்களிடம் உறுதியளித்துள்ளார் ‘ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT