காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததால், இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.20 அடியாக உயர்ந்தது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியிலிருந்து அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,525 கன அடியிலிருந்து 17,004 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14,000 கன அடி நீரும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.53 டிஎம்சி ஆக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மீண்டும் மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.