மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரியில் செவ்வாய்க்கிழமை தொலைத்தொடர்பு நிலைய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து தலைமை வகித்துப் பேசினார். மாவட்டச் செயலர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இளம்பரிதி, இரா.சிசுபாலன், மாதர் சங்க மாவட்டச் செயலர் கிரைஸாமேரி ஆகியோர் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் அனுமதி வழங்க வேண்டும். விதிகளை மீறிச் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.