தமிழ்நாடு

151 காவலர்களின் உருவம் பொறித்த கல்வெட்டை முதல்வர் திறந்துவைத்தார்

DIN

வீரமரணம் அடைந்த காவலர்கள் 151 பேரின் உருவம் பொறித்த கல்வெட்டை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தார். 

நாளை(அக்டோபர் 21 ஆம் தேதி) காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, 1962 முதல் பல்வேறு சம்பவங்களில் வீரமரணம் அடைந்த 151 காவலர்களின் உருவம் பொறித்த கல்வெட்டினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். 

சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கல்வெட்டினை திறந்து வைத்து வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 

நாளைய தினம் இதே இடத்தில் காவலர்களுக்கு வீர அஞ்சலியும் செலுத்தப்படுகிறது. இன்று நடைபெற்ற நிகழ்வில் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட காவல் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT