சீர்காழியில் கரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் தீயணைப்புத் துறையினர் கலந்துகொண்டனர்.
தீயணைப்புத் துறை இயக்குனர் சைலேந்திர பாபு ஆணைப்படியும், நாகப்பட்டினம் மாவட்ட அலுவலர் அறிவுறுத்தலின்படி சீர்காழி தீயணைப்பு மீட்புப் பணி நிலைய அலுவலர் கோ.ஜோதி தலைமையில் அதன் குழுவினருடன் சீர்காழி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கடைத்தெரு, தென்பாதி, பைபாஸ் கைகாட்டி ரவுண்டானா ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களிடம் கரோனோ விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து முகக்கவசம் மற்றும் துண்டுப் பிரசுரம் வழங்கி சமூக இடைவெளி விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. பின்னர் கரோனா கவச உடையில் பொதுமக்கள் முன்னிலையில் கரோனா உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்