ராணிப்பேட்டையில் விவசாயிகளுக்கு நெல் அறுவடை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் இன்று வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திரமயமாக்கல் உப இயக்க திட்டத்தின் கீழ் ரூ.5.52 கோடி மதிப்பிலான நெல் அறுவடை இயந்திரம், டிராக்டர், பவர் டில்லர் ஆகிய வேளாண் இயந்திரங்கள் ரூ.2.6 கோடி மானியத்தில் மாவட்டத்தைச் சேர்ந்த 5 விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர், வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.