தமிழ்நாடு

மணப்பாறையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் திங்கட்கிழமை பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கட்சியின் வட்டச்செயலாளர் வழக்குரைஞர் எம்.சக்திவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சரவணன், வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

திண்டுக்கல் இளம்பெண் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமைக்கு நீதி வேண்டும், பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்ய வேண்டும், வேளாண் சட்டங்களையும், புதிய கல்விக்கொள்கைகளைத் திரும்பப் பெற வேண்டும், சமுத்திரம் கிராமத்தில் நடைபெறும் பட்டியலின மக்களின் மீதான ஜாதி ஆதிக்க வன்கொடுமையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கோஷங்கள் எழுப்பி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் மத்திய கமிட்டி உறுப்பினர் பழ.ஆசைதம்பி, தொழிற்சங்க மாநில பொதுச்செயலர் கே.ஜி.தேசிகன், மாநிலக்குழு உறுப்பினர் கே.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விளக்கவுரையாற்றினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

SCROLL FOR NEXT