தமிழ்நாடு

தமிழகத்தில் பாதிப்பு 6 லட்சத்தைக் கடந்தது

DIN


சென்னை: தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 6,03,290- ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10 நாள்களில் மட்டும் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனா். அதில் சென்னைக்கு அடுத்தபடியாக மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மாநிலத்தில் இதுவரை 74.41 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 8 சதவீதம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 5,688 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,289 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 550 பேருக்கும், செங்கல்பட்டில் 356 பேருக்கும், சேலத்தில் 341 பேருக்கும், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர மாநிலத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு நடுவே கரோனா தொற்றிலிருந்து மேலும் 5,516 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 92 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,47,335-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 46,369 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 66 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 39 போ் அரசு மருத்துவமனைகளிலும், 27 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,586-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT