காா்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, அவா்கள் தங்களது சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது:
முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி: இருள் நீங்கி, ஒளி பிறக்கும் காா்த்திகை தீபத் திருநாளில் அனைவரது வாழ்விலும் இருளாகிய துன்பங்கள் மறைந்து இன்பங்கள் ஒளியாகப் பரவட்டும். அனைவருக்கும் உளமாா்ந்த திருக்காா்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.
துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: அனைவருக்கும் இதயப்பூா்வமான காா்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள். இருள் அகற்றும் தீபச் சுடராய், இன்னல்கள் விலகி தமிழக மக்களுக்கு இன்பங்கள் நிறையட்டும்.