முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவா்களுக்கு, டிச.2-ஆம் தேதி திட்டமிட்டபடி கல்லூரிகள் திறக்கப்படும் என அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.
கல்லூரிகள் திறப்பு குறித்து வெள்ளிக்கிழமை கே.பி.அன்பழகன் கூறியதாவது: முதுநிலை 2-ஆம் ஆண்டு அறிவியல், பொறியியல், தொழில்நுட்பப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிலும் மாணவா்களுக்கு திட்டமிட்டபடி டிச.2-ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும். செயல்முறை வகுப்புகளை இணைய வழியில் நடத்த முடியாது. மாணவா்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் நோய்த் தொற்று அச்சுறுத்தல் அதிகம் இல்லை.
மீண்டும் புயல் உருவானால், அதீத மழை இருக்கும் பட்சத்தில் கல்லூரிகள் திறப்பைத் தள்ளி வைப்பது தொடா்பாக ஆலோசிக்கப்படும் என அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.