நீலகிரி மாவட்டம் மசினகுடி வாழைத்தோட்டம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி வளாகத்தினுள் திடீரென ஒரு காட்டு யானை நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வெகுநேரம் பள்ளி வளாகத்திலுள்ள மரங்களுக்கு நடுவே உலாவியது, அங்கிருந்தவர்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே வனத்துறையினர் விரைந்து வந்து யானையை விரட்டி விட்டனர்.