சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கி ஆறு ஆண்டு நிறைவுற்ற நிலையில், சனிக்கிழமை தமிழகம் முழுவதும் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி உத்தரவுபடி மாநிலம் முழுவதும் ஏழாம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலை, அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொடியை மாவட்ட தலைவர் கே.வி. சுசீந்திரகுமார் ஏற்றிவைத்தார்.
விழாவிற்கு, ஓமலூர் நகர தலைவர் மணிகண்டன் வரவேற்புரை ஆற்ற, வட்டார தலைவர்கள் ராஜேந்திரன் மற்றும் சேதுராமன் தலைமை தாங்கினார்.
மக்களுக்கு இலவச வேட்டி சேலை, பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் ஆகியவற்றை மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ரகுநந்தகுமார், கிருஷ்ணராஜ், சச்சு, விஜயராஜ் ஆகியோர் தலைமையில் வழங்கப்பட்டது. கருப்பூர் நகர தலைவர் அய்யண்ணன் நன்றி உரையாற்றினார்.