தமிழ்நாடு

செய்யாறு தொகுதியில் 1,793 பேருக்கு நிவாரண உதவி

DIN

செய்யாறு தொகுதியில் மழை வெள்ள பாதிப்புக் காரணமாக 61 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள 1,793 பேருக்கு எம்.எல்.ஏ.தூசி.கே.மோகன் நிவாரண உதவியை சனிக்கிழமை வழங்கினார்.  

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியைச் சேர்ந்த செய்யாறு மற்றும் வெம்பாக்கம் வட்டங்களில் நிவர் புயல் மற்றும் தொடர் மழைக் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் செய்யாறு வட்டத்தில் 40 முகாம்களிலும், வெம்பாக்கம் வட்டத்தில் 21 முகாம்களில் கடந்த சில தினங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அரசு சார்பில் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன.

முகாமிகளில் உள்ளவர்களுக்கு அரசு மூலம் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செய்யாறு வட்டத்தில் விண்ணாவாடி, அத்திக்குளம் ஆகிய கிராமங்களிலும் வெம்பாக்கம் வட்டத்தில் ஆலாத்தாங்கல் கிராமத்திலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் கி.விமலா தலைமை தாங்கினார். வெம்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாமண்டூர்.டி.ராஜூ, வட்டாட்சியர்கள் திருமலை, சுபாஷ், குமாரவேலு, முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.தூசி.கே.மோகன் பங்கேற்று 61 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள 1,793 பேருக்கு தலா 10 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் பாமாயில் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்ட பாய், போர்வை, துண்டு, பிஸ்கட் போன்றவற்றை நிவாரண உதவியாக  வழங்கினார். 

அ.தி.மு.க கிளைக் கழகங்களுக்கு நிதியுதவி  

அதனைத் தொடர்ந்து வெம்பாக்கம் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த பிரம்மதேசம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து நான்கு கிளைக் கழக நிர்வாகிகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ வுமான தூசி.கே. மோகன் வழங்கினார். மேலும் அப்பகுதியிலிருந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு சில்வர் தட்டு, இனிப்பு வழங்கினார். 

முன்னதாக செய்யாறு நகரம் கொடநகர் பகுதியில் சில தினங்களுக்கு முன் இறந்த வேந்தா என்பவர் குடும்பத்திற்கு தவசி கிராமத்தில் வீடு சேதம் அடைந்த ராஜம்மாள் ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரம் மற்றும் நிவாரணப் பொருள்களை எம்.எல்.ஏ.தூசி.கே.மோகன் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் எம்.மகேந்திரன், எம்.அரங்கநாதன், சி. துரை, வே.குணசீலன், அதிமுக மாவட்ட நிர்வாகிகள் டி.பி.துரை,பி.ரமேஷ், எஸ்.சுரேஷ்நாராயணன், பச்சையப்பன், கன்னியப்பன், சேகர், பிரகாஷ், சுதாகர், மகாதேவன், மணிகண்டன், சக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT