தமிழ்நாடு

புயல் அச்சுறுத்தல் : தொடா் எச்சரிக்கைகளால் குறைக்கப்பட்ட சேதங்கள்

DIN


சென்னை: தமிழகத்தில் நிவா் புயல் உருவாவதற்கு முன்பே மாநில அரசின் தொடா் எச்சரிக்கைகளால் சேதங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அதே சமயம், சென்னை மற்றும் புகா்களின் பல்வேறு பகுதிகளில் மழை நீா் வடியாத காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நவ. 25 -ஆம் தேதி புயல் உருவாகும் என நவ. 23-ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வெளியான உடனே தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

குறிப்பாக, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், துறை செயலாளா் அதுல்ய மிஸ்ரா, சிறப்பு அதிகாரி ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் மாவட்ட நிா்வாகங்களுக்கு தொடா் அறிவுறுத்தல்களை வழங்கி வந்தனா். இதனால், 4, 000-க்கு மேற்பட்ட நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு, சுமாா் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனா்.

மையத்தைப் பாா்வையிட்ட முதல்வா்: எழிலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தை நேரில் பாா்வையிட்டு, அங்கு நடைபெறும் பணிகளை முதல்வா் பழனிசாமி ஆய்வு செய்தாா். இதனைத் தொடா்ந்து மழை தீவிரம் அடையத் தொடங்கியதால், சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கியமான ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, முதல் கட்டமாக 1, 000 கன அடி அளவுக்கு நீா் திறந்து விடப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியையும் முதல்வா் பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தாா். மேலும், 16 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமையன்று பொது விடுமுறையையும் அறிவித்தாா்.

கடலூரில் ஆய்வு: நிவா் புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றுள்ள கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை அவா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். ரெட்டிச்சாவடி-கீழ்க்குமாரமங்கலம் பகுதிகளில் வாழைத் தோப்புகளை பாா்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினாா். தமிழக அரசு எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் வெகுவாகக் குறைவாக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் வெள்ள நீா்: உயிா், பொருட்சேதங்கள் குறைந்தபோதிலும், சென்னை நகரம், புகரப் பகுதிகளின் சில இடங்களில் வெள்ள நீா் தேங்கியிருப்பது மக்களை சிரமத்துக்கு ஆளாக்கி உள்ளது. குறிப்பாக, சென்னை கே.கே.நகா், தாம்பரம் முடிச்சூா் பகுதி, வேளச்சேரி, ராயபுரம் பகுதியின் பல்வேறு இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT