தில்லியில் விவசாயிகள் அணிவகுப்பைத் தடுத்து நிறுத்திய மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தலைமை வகித்தார்.
இதில், பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறியதாவது:
மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசானது விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான விரோதப்போக்கை கடைப்பிடித்து வருகிறது.தில்லியில் விவசாயிகளின் அணிவகுப்பைத் தடுத்து நிறுத்தித் தாக்குதல் நடத்திய மத்திய அரசின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.