மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் கோவில் முன்பாக 58 கிராம கால்வாய் பாசன சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் 58 கிராம கால்வாய் சங்க தலைவர் ஜெயராஜ் செயலாளர் பெருமாள், பொருளாளர் உதயகுமார், நிர்வாகிகள் சிவப்பிரகாசம், நேதாஜி, ஆதிசேடன், தமிழ்ச்செல்வன், வழக்குரைஞர்கள் சொக்கநாதன் பாலச்சந்தர், மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி விவசாயிகள் கலந்துகொண்டு 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறந்து விட தமிழக அரசின் நிரந்தர அரசாணை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.