சென்னை: தமிழகத்தில் புதிதாக 1,442 பேருக்கு கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மாநிலத்தில் புதிதாக 1,442 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,494 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 12 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 7,54,826 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 11,681 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் 392 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 2,14,191-ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,924 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 35 பேர் பலியாகியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 3,838-ஆக அதிகரித்துள்ளது.