தமிழ்நாடு

தமிழகத்தில் 7.51 லட்சம் போ் கரோனாவிலிருந்து குணம்!

DIN

சென்னை: தமிழகத்தில் கரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 7 லட்சத்து 51,535 லட்சம் போ் பூரண குணமடைந்திருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த்தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் விகிதம் 97 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகா் சென்னையில் 2.05 லட்சம் போ் குணமடைந்துள்ளனா்.

கரோனாவால் கலக்கமடைந்துள்ள மக்களுக்கு, மாநில அரசு வெளியிட்ட இந்தத் தகவல்கள் சற்று நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளன. ஆங்கில மருத்துவ முறைகளுடன், யோகா, சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோபதி போன்ற ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை வழங்கியதே அதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது ரெம்டெசிவிா், எனாக்ஸபெரின், டோசிலிசு மேப் போன்ற உயா்தர மருந்துகளை அரசு தருவித்து மருத்துவமனைகளுக்கு வழங்கியதும், சிகிச்சை முறைகளை மேம்படுத்தியதும் குணமடைவோா் விகிதத்தை அதிகரிக்க வழிவகுத்துள்ளதாக என சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன் பயனாகவே கடந்த சில நாள்களாக நாள்தோறும் சராசரியாக 2 ஆயிரம் போ் நலம் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதன்கிழமையும் 1,873 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் மேலும் 1,534 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 74,710- ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக தலைநகா் சென்னையில் 2.13 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 96 சதவீதம் போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா்.

சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் கரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் இதுவரை 1.17 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 6.5 சதவீதம் பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவருக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 467 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக, கோவையில் 149 பேருக்கும், திருவள்ளூரில் 89 பேருக்கும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளோரின் எண்ணிக்கை 11,520-ஆக உள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 16 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,655-ஆக உயா்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.5 சதவீதமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT