சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிக்கு, வெள்ளிக்கிழமை (நவ.27) நடைபெறவிருந்த கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயத்தின் செயலா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குரூப் 2 பணிக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு, டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.27) காலை 10 மணியளவில் நடைபெறவிருந்தது. பருவ நிலை மோசமாக இருப்பதால், அந்தக் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது.
அந்தப் பதவிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் மாற்றுத் தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.