ஆற்காடு: திமிரி அடுத்த மோசூர் கிராமத்தில் புயல் காரணமாக வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி அடுத்த மோசூர் கிராமத்தில் நிவர் புயல் காரணமாக கடந்த இரு தினங்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் 5 ஏக்கருக்கு மேல் பயிர் செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் காற்றினால் ஒடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது.