நிவர் புயல் எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் விடிய,விடிய பெய்த கன மழையால் ஒருவர் உயிரிழந்தார், 9 வீடுகள் மற்றும் வாழை உள்ளிட்ட மரங்கள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பலமான காற்று வீசி வருவதால் பேருந்து மற்றும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல இடங்களில் வாழை மரங்கள் சேதமடைந்தன. இதனால் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வருவாய் நஷ்டமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் திரும்பிய பக்கமெல்லாம் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.