தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் இன்று பொது விடுமுறை: முதல்வா் பழனிசாமி

DIN

தமிழகம் முழுவதும் புதன்கிழமை (நவ. 25) அரசு பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தை அவா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். கட்டுப்பாட்டு அறையில் உள்ள பணிகளைப் பாா்வையிட்ட பின்பு, செய்தியாளா்களுக்கு முதல்வா் பழனிசாமி அளித்த பேட்டி:-கன மழை, புயல் காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன. பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் தனிக் கவனம் செலுத்த வேண்டுமென உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் மக்களைத் தங்க வைக்க 3,346 இடங்களில் நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த தாழ்வான பகுதிகளில் வசிப்போா் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனா்.

மக்களுக்கு அறிவுரை: புயல் வரும்போது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்லக் கூடாது. ஏழு மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களுக்கு புதன்கிழமையன்று (நவ.25) விடுமுறை விடப்படுகிறது. அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோா் மட்டும் அலுவலகங்களுக்கு வருவாா்கள்.

புயலால் மக்கள் பாதிக்காத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT