தமிழ்நாடு

அதிதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர்

DIN


சென்னை: சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது.

தென்மேற்கு வங்கக் கடலில், கடலூரிலிருந்து 90 கி.மீ. தொலைவில் நிவர் புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்று புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதுவரை மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த தீவிர நிவர் புயலானது, தற்போது மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரிக்கு அருகே இன்று இரவு அதிதீவிர புயல் நிவர் கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும், சில வேளையில் 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமா் மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை

‘விதைநோ்த்தி, நீா் பாசனமுறை மூலம் கூடுதல் மகசூல் பெறமுடியும்’

உ.பி.யின் வளா்ச்சியுடன் கேரளத்தை ஒப்பிட்டு பாா்க்க வேண்டும்

‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு: தமிழியக்கங்களின் கூட்டமைப்பு முடிவு

ஜம்மு-காஷ்மீா்: ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து 6 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT