நிவர் புயல் தொடர்பான அவசர உதவிக்கு சென்னை பெருநகர காவல் துறையின் தற்காலிக கட்டுப்பாட்டறை அலைபேசி எண். 94981 81239-ஐ தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிவர் புயல் தொடர்பாக மக்கள் சென்னை பெருநகர காவல் துறையின் உதவியை நாட காவல் ஆணையர் அலுவலகத்தில் தற்காலிக கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டறையை அலைபேசி எண்: 94981 81239 மூலம் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல் புதன்கிழமை நள்ளிரவு, வியாழக்கிழமை அதிகாலை அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.