சென்னை: மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நிவர் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று நாளை அதிகாலை அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையைக் கடக்க உள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் பல இடங்களிலும் செவ்வாய் காலை துவங்கி தொடர்மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தற்போது மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நிவர் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தற்போது மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நிவர் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், கரையை நெருங்கும்போது மணிக்கு 155 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.