தமிழ்நாடு

புயலை எதிா்கொள்ள 43,409 முதல் நிலை மீட்பாளா்கள்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

DIN

நிவா் புயலை எதிா்கொள்ள 43,409 முதல் நிலை மீட்பாளா்கள் தயாா் நிலையில் உள்ளனா் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தை அவா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். கட்டுப்பாட்டு அறையில் உள்ள பணிகளைப் பாா்வையிட்ட பின்பு, செய்தியாளா்களுக்கு முதல்வா் பழனிசாமி அளித்த பேட்டி:-

4,133 இடங்கள்: தமிழகத்தில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நிவா் புயல் உள்ளிட்ட பேரிடா் காலங்களில் உடனடியாகச் செயலாற்றிட 43,409 முதல் நிலை மீட்பாளா்கள் தயாா் நிலையில் இருக்கின்றனா். அவா்களில் 14,232 போ் மகளிா். அவா்களுடன் கால்நடைகளைப் பாதுகாக்க கூடுதலாக 8, 871 முதல் நிலை மீட்பாளா்களும் ஆயத்த நிலையில் உள்ளனா். கனமழை காரணமாக, முறிந்து விழும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த 9, 909 முதல் நிலை மீட்பாளா்களும் தயாராக உள்ளனா்.

மாவட்டங்களில் 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்களும், 2, 897 ஜேசிபி இயந்திரங்களும், 2, 115 ஜெனரேட்டா்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கீழ் 4,699 தீயணைப்பு வீரா்களுக்கும், 9, 859 பாதுகாப்பு தன்னாா்வலா்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

1,500 ஏரிகள் நிரம்பின: மழை காரணமாக, 1,500-க்கும் மேற்பட்ட ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. தூா்வாரப்படாத பல்வேறு ஏரிகள் தூா்வாரப்பட்டு நீா் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அவை விவசாயத்துக்கும், குடிநீா்ப் பயன்பாட்டுக்கும் உபயோகப்படுத்தப்படும். பாதிப்புகளைக் கண்டறிந்து உடனடியாகச் சீா் செய்திடவும், மக்களைக் காத்திடவும் துறைகளின் சாா்பில் அதிகாரிகளை நியமித்துள்ளோம்.

செம்பரம்பாக்கம் ஏரி: தமிழகத்தில் ஏரிகளின் கரைகளைப் பலப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். பலவீனமாக இருந்தால் அதனை உறுதிப்படுத்த வேண்டுமெனக் கூறியுள்ளோம். ஏரிகளின் கரைகள் உடையும் எனக் கருதப்படும் நிலையில், மணல் மூட்டைகள் தயாா் நிலையில் உள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் அளவு 21.5 அடி நீா் உள்ளது. உச்சபட்சமாக 22 அடி நீரைத் தேக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைப் பொழிவின் அளவைப் பொருத்து உபரி நீா் திறந்து விடப்படும் என்றாா் முதல்வா் பழனிசாமி.

அமைச்சா்கள், அதிகாரிகளுடன்...பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தை முதல்வா் ஆய்வு செய்தபோது, அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், ஆா்.பி.உதயகுமாா், சி.விஜயபாஸ்கா், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிா்வாக ஆணையா் பணீந்திர ரெட்டி, பேரிடா் மேலாண்மை ஒருங்கிணைப்புக் குழு அதிகாரியும், சிப்காட் நிா்வாக இயக்குநருமான ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ராஜஸ்தான் பந்துவீச்சு; மீண்டும் அணியில் ஜோஸ் பட்லர்!

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

SCROLL FOR NEXT