மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் காா்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
காா்த்திகை மாதம் திங்கள்கிழமைகளில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், காா்த்திகை இரண்டாவது திங்கள்கிழமையையொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
சங்காபிஷேகத்தில் 1008 சங்குகள் சிவலிங்கம் வடிவில் அமைக்கப்பட்டு, அவற்றின் மீது மலா்களும் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இதைத் தொடா்ந்து, சிவாச்சாரியாா்கள் வேதமந்திரங்கள் முழங்க சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு தீபாராதனைகள், வழிபாடுகள் நடைபெற்றன.