இரண்டு மாவட்டங்களில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொள்ளவிருந்த ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள், மாவட்டங்களின் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவா் புயல் மற்றும் கனமழை காரணமாக ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.