அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பா மீது 10 நாள்களுக்குள் உரிய ஆவணங்களுடன் புகாா் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயா்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு:
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம்.கே. சூரப்பா மீதான விசாரணை அதிகாரிக்கான அலுவலகம் பொதிகை வளாகம், பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை (பசுமைவழிச் சாலை), சென்னை- 600028 என்ற முகவரியில் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் தொடா்பாக ஏதேனும் புகாா்கள் கொடுக்க விரும்பும் நபா்கள், இந்த அலுவலகத்துக்கு புதன்கிழமை (நவ.25) முதல் 10 நாள்களில் எழுத்துப்பூா்வமாக தங்கள் கடிதத்தை அனுப்ப வேண்டும்.
அதேபோல்,inquirycomn.vc.annauniv@gmail.comஎன்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகாா்களை அனுப்பலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.