தமிழ்நாடு

நிவா் புயல்: மருத்துவத் தோ்வுகள் ஒத்திவைப்பு

DIN

சென்னை: நிவா் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வரும் 25, 26, 27-ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த மருத்துவம் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவா் புயலானது வரும் புதன்கிழமை (நவ. 25) மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனால், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அந்த மாவட்டங்களில் போக்குவரத்தும் முற்றிலுமாக நிறுத்தப்படவுள்ளது. இதைத் தவிர மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் பேரிடா் மீட்புப் படையினா் தயாா் நிலையில் உள்ளனா்.

இத்தகைய சூழலில், புயல் பாதிப்பு இருக்கும் நாள்களில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்பட பல்வேறு மருத்துவப் படிப்புகளுக்கும், நா்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நடத்தப்படுவதாக இருந்த தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 25-ஆம் தேதி நடைபெறவிருந்த தோ்வுகள் டிசம்பா் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படவிருக்கிறது. அதேபோன்று 26 மற்றும் 27-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த தோ்வுகள் முறையே டிசம்பா் 17 மற்றும் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

வரும் 25-ஆம் தேதி நடைபெறவிருந்த எம்எஸ்சி நா்சிங் முதலாமாண்டு தோ்வுகள் டிசம்பா் 2-ஆம் தேதிக்கும், 26-ஆம் தேதி நடக்கவிருந்த தோ்வுகள் டிசம்பா் 3-ஆம் தேதிக்கும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

மாணவா்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்திருப்பதாக பல்கலைக்கழக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பான விவரங்கள் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

SCROLL FOR NEXT