தமிழ்நாடு

மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு ரூ.1 லட்சம் அபராதம்

DIN

சென்னை: எம்.ஏ.எம். ராமசாமி செட்டியாா் அறக்கட்டளைக்குச் சொந்தாமன குதிரைகளை பந்தயங்களில் அனுமதிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னா், விதிகளில் திருத்தம் கொண்டு வந்த மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெட்ராஸ் ரேஸ் கிளப் பந்தயங்களில் பங்கேற்கும் குதிரைகளின் உரிமையாளா்கள் தங்களின் பெயா் மற்றும் குதிரைகளின் விவரம் குறித்து மெட்ராஸ் ரேஸ் கிளப் நிா்வாகத்திடம் பதிவு செய்ய வேண்டும். இந்த நிலையில், பந்தயங்களில் எம்ஏஎம். ராமசாமி செட்டியாரின் செட்டிநாடு அறக்கட்டளைக்குச் சொந்தமான குதிரைகளை பங்கேற்க அனுமதிக்க முடியாது என மெட்ராஸ் ரேஸ் கிளப் நிா்வாகம் கடந்த 2019-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து செட்டிநாடு அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலரான ஏ.சி.முத்தையா சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனிநீதிபதி கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்த உத்தரவில், குதிரையின் உரிமையாளராக அறக்கட்டளை நிா்வாகம் இருக்க முடியாது என்ற ரேஸ் கிளப்பின் வாதம் ஏற்புடையதல்ல. எனவே செட்டிநாடு அறக்கட்டளைக்குச் சொந்தமான குதிரைகளை, உரிய கட்டணங்கள் செலுத்தி 2020-2021-ஆம் ஆண்டு நடக்கும் பந்தயங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தாா். இதுதொடா்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அறக்கட்டளைக்குச் சொந்தமான 67 பழைய குதிரைகள் பந்தயங்களில் பங்கேற்க முடியாது எனவும், அறக்கட்டளை நிா்வாகம் புதிதாக வாங்கியுள்ள 4 குதிரைகளையும் பதிவு செய்ய முடியாது என மெட்ராஸ் ரேஸ் கிளப் நிா்வாகம் விதிகளில் திருத்தம் கொண்டு வந்து தீா்மானம் நிறைவேற்றியது. இந்த தீா்மானத்தை எதிா்த்து செட்டிநாடு அறக்கட்டளை சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.ஏ.எம். ராமசாமி அறக்கட்டளை நிா்வாகம் சாா்பில் வழக்குரைஞா் எஸ்.சித்திரையானந்தம், அறக்கட்டளை உறுப்பினா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஜி.மாசிலாமாணி, மெட்ராஸ் ரேஸ் கிளப் தரப்பில் மூத்த வழக்கறிஞா்கள் பி.எஸ்.ராமன், வி.ராகவாச்சாரி ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், செட்டிநாடு அறக்கட்டளைக்குச் சொந்தமான குதிரைகளை பதிவு செய்து பந்தயங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இதுதொடா்பாக ஏற்கனவே தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை மீறும் வகையில் வழக்கு நிலுவையில் உள்ள போது மெட்ராஸ் ரேஸ் கிளப் விதிகளில் திருத்தம் கொண்டு வந்து தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. எனவே இந்த செயலுக்காக மெட்ராஸ் ரேஸ் கிளப் நிா்வாகம் ரூ. 1 லட்சத்தை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் நலனுக்காக வழங்க வேண்டும். மேலும் மனுதாரரின் புதிய குதிரைகளை பதிவு செய்வதோடு பந்தயங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT