தமிழ்நாடு

புயல் எச்சரிக்கை: பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்கள்

DIN


சென்னை: வங்கக் கடலில் உருவாகும் நிவர் புயல் நாளை மறுநாள் கரையைக் கடக்கவிருக்கும் நிலையில், பொது மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதில்,  

புயல் வீசும் போது..

வீட்டில் இருப்போர் கவனத்துக்கு..

முக்கிய தகவல்களுக்கு..

புயலின் போது வெளியே இருப்போர்..

மீனவர்கள் கவனத்துக்கு..

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக (நிவர்) வலுவடைந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 25-ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கக் கூடும்.

நாளை கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 80லிருந்து 90 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர்  வேகத்திலும் வீசக் கூடும். நாளை மறுநாள் புயல் கரையைக் கடக்கும்போது காற்று மணிக்கு 100-லிருந்து 110 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT