தமிழ்நாடு

பிகாருக்கு சிறப்பு ரயில் மூலம் 1,464 பேர் அனுப்பி வைப்பு

DIN

தஞ்சாவூரிலிருந்து பிகாருக்கு சிறப்பு ரயில் மூலம் 1,464 பேர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டுமானம், உணவகப் பணிகளுக்காக பிகார், உத்தரப் பிரதேசம் உள்பட 30 மாநிலங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 5,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பொது முடக்கம் காரணமாக வேலையின்றி, வருமானமின்றி தவித்த வெளி மாநிலத் தொழிலாளர்களில் சுமார் 2,000 பேர் சொந்த ஊருக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தனர்.

இவர்களில் ஏற்கெனவே, மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்துக்கு தனியார் பேருந்துகள் மூலம் ஏறக்குறைய 250 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், தஞ்சாவூரிலிருந்து சிறப்பு ரயில் மூலம் உத்தரப் பிரதேசத்துக்கு திங்கள்கிழமை இரவு 285 பேர் சென்றனர். இவர்களுடன் திருவாரூர், நாகை மாவட்டங்களில் பணியாற்றிய உத்தரப் பிரதேச தொழிலாளர்களையும் சேர்த்து மொத்தம் 608 பேர் அனுப்பப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து பிகாருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1,173 பேரும், திருவாரூர் மாவட்டத்திலிருந்து 91 பேரும், நாகை மாவட்டத்திலிருந்து 160 பேரும், திருச்சி மாவட்டத்திலிருந்து  என மொத்தம் 1,464 பேர் சென்றனர். இந்த ரயிலை மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் கொடியசைத்து அனுப்பி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜெ. லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT