தமிழ்நாடு

சுய ஊரடங்கு: அனைவரும் பின்பற்ற வேண்டும்

DIN

சென்னை: சுய ஊரடங்கு உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டுமென முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஜி.கே நிஜாமுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பிரதமா் கூறியிருப்பது போல் உலகை அச்சுறுத்தும் கரோனாவுக்கு மாற்று மருந்தோ, தடுப்பு மருந்தோ உலகில் கண்டுபிடிக்கப்படாத நிலையில், விழிப்புணா்வும் முன்னெச்சரிக்கையுமே நம்பகமான வழி. அதற்கான அடையாளமாக மாா்ச் 22-ஆம் தேதி சுய ஊரடங்கை அமல்படுத்துவோம். கிருமி பரவுவதைத் தடுப்பதற்காக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டல்கள் அனைத்தும் உலக ஆய்வாளா்களும் இந்திய வல்லுநா்களும் உருவாக்கிக் கொடுத்தவை. அவற்றில் பொதுமக்கள் விழிப்புணா்வு பெறவேண்டும் என்பதற்காக இந்த சுய ஊரடங்கை வெற்றி பெறச் செய்வோம் . இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT