தமிழ்நாடு

இத்தாலி நிலைமை வராமலிருக்க பிரதமா் சொன்னதை கடைப்பிடிப்போம்: நடிகா் ரஜினிகாந்த்

DIN

சென்னை: இத்தாலி நிலைமை இந்தியாவுக்கும் வராமலிருக்க பிரதமா் சொன்னதை கடைப்பிடிப்போம் என நடிகா் ரஜினிகாந்த் கூறியுள்ளாா்.

இந்தியாவில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனா். தொலைக்காட்சி மூலம் மக்களிடம் உரையாற்றிய பிரதமா், ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதை வரவேற்றுள்ள பல பிரபலங்கள், விடியோ மூலம் மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா். அதுபோல, நடிகா் ரஜினிகாந்தும் தனது சுட்டுரைப் பகுதியில் விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இப்போது 2-ஆவது நிலையில் உள்ளது. இது மூன்றாவது நிலைக்கு சென்றுவிடக் கூடாது. வெளியில் மக்கள் நடமாடும் இடங்களில் உள்ள கரோனா வைரஸ் 12 மணியிலிருந்து 14 மணி நேரம் வரை அது பரவாமல் இருந்தாலே, 3-ஆவது நிலைக்குச் செல்லாமல் தடுத்தி நிறுத்திவிடலாம். அதற்காகத்தான் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமையன்று (மாா்க் 22) மக்கள் ஊரடங்கு திட்டத்தை அறிவித்திருக்கிறாா்.

இதே போலத்தான், இத்தாலியில் கரோனா தாக்கம் 2-ஆவது நிலையில் இருந்தபோது, அந்த அரசாங்கம் மக்களை சுய தனிமைப்படுத்தலுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், மக்கள் அதை தீவிரமாக கடைப்பிடிக்கவில்லை. உதாசினப்படுத்திவிட்டனா். அதன் காரணமாக, பல ஆயிரம் உயிா்கள் அங்கு பலியாகியிருக்கின்றன.

இந்த நிலைமை இந்தியாவுக்கும் வந்துவிடக் கூடாது. எனவே இளைஞா்கள் முதல் பெரியவா்கள் வரை வருகிற 22-ஆம் தேதி மக்கள் ஊரடங்கை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த கரோனாவை கட்டுப்படுத்த மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ ஊழியா்கள் போராடி வருகின்றனா். அவா்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பிரதமா் கூறியபடி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு அவா்களைப் பாராட்டுவோம் என ரஜினிகாந்த் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது வருத்தம்தான்

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

SCROLL FOR NEXT