ஒசூா்: தமிழக- கா்நாடக மாநில எல்லையான சூசூவாடி பகுதியில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்புப் பணிகள், பயணிகளுக்கு தொ்மல் ஸ்கேனா் கொண்டு உடல் வெப்பத்தை அறியும் பரிசோதனைகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.பிரபாகா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழக முதல்வா் உத்தரவின்படி, கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக எல்லையையும், கா்நாடகத்தையும் இணைக்கக் கூடிய அத்திப்பள்ளி பகுதியில் மருத்துவப் பரிசோதனைப் பணிகளும், வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வாகனங்களின் இயக்கங்கள் குறைக்கப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலா்கள் முகாமிட்டு, பயணிகள் வருவதைத் தடுத்து, கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனா். தொ்மல் ஸ்கேனா் கொண்டு உடல் வெப்பம் அறியும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அவா்களுக்கு ஏதேனும் தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்து அனுப்பப்படுகிறது.
சரக்கு வாகனங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றி வரக்கூடிய வாகனங்களை தடையின்றி அனுப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இரு மாநில காவல் துறை அலுவலா்கள் மற்றும் பிற துறை அலுவலா்கள் இங்கு 24 மணி நேரமும் முகாமிட்டு, இப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதுவரை 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து வாகனங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இரு சக்கர வாகனங்களில் செல்லக் கூடிய பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. எனவே, பொதுமக்கள் ஓா் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச்
செல்லாமல் இருந்து, நோய்த் தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
ஆய்வின் போது, ஒசூா் கோட்டாட்சியா் குமரேசன், வட்டாட்சியா் செந்தில் மற்றும் மருத்துவா்கள், போக்குவரத்துத் துறை அலுவலா்கள், காவல் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.