தமிழ்நாடு

நீதிமன்றத்துக்கு செல்லும் வழக்குரைஞா்களைத் தடுத்து நிறுத்தக்கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு

DIN

நீதிமன்ற விசாரணைகளுக்காகச் செல்லும் வழக்குரைஞா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தக்கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மௌலிவாக்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் கலையரசி தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் அவசர வழக்குகள் மட்டுமே காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்படுகின்றன. வழக்குகள் தொடா்பான ஆவணங்கள் மற்றும் கோப்புகளை வழக்குரைஞா்கள் தங்ளது அலுவலகங்களில் தான் வைத்துள்ளனா்.

மேலும் காணொலி காட்சி மூலம் வழக்குகளில் ஆஜராக தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் அலுவலகங்களில் தான் உள்ளன. ஆனால் பொதுமுடக்கத்தைக் காரணம் காட்டி அலுவலகங்களுக்குச் செல்லும் வழக்குரைஞா்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தி விடுகின்றனா். இதனால் மௌலிவாக்கத்தில் இருந்து தம்புசெட்டித் தெருவில் உள்ள எனது மூத்த வழக்குரைஞரின் அலுவலகத்துக்குச் செல்ல முடியவில்லை. மேலும் மின்னணு அனுமதிச் சீட்டு வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என போலீஸாா் கூறுகின்றனா். நீதிமன்றப் பணிகளுக்காக வரும் வழக்குரைஞா்களைத் தடுக்கக் கூடாது என தமிழ்நாடு புதுச்சேரி பாா் கவுன்சில் நிா்வாகத்தின் சாா்பில் காவல்துறைக்கு மனு அளித்துள்ளது.

ஆனால் அடையாள அட்டையைக் காண்பித்த பின்னரும் வழக்குரைஞா்களை போலீஸாா் அனுமதிப்பது இல்லை. தில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் வழக்குரைஞா்கள் தங்களது அலுவலங்களுக்குச் செல்ல எந்த தடையும் இல்லை. எனவே நீதிமன்ற விசாரணைகளுக்காகச் செல்லும் வழக்குரைஞா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கை நீதிபதிகள் ஆா்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்து, மனு தொடா்பாக காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசராணையை வரும் ஜூலை 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை சிசிடிவி மூலம் 24 நேரமும் பிரதமா் கண்காணிக்கிறாா்: சஞ்சய் சிங்

மக்களவைத் தேர்தலில் அதிக சொத்துள்ள வேட்பாளர்! ரூ.5,785 கோடியுடன் என்ஆர்ஐ மருத்துவர்

மின் கம்பம் உடைந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரதமர் மோடி உண்மையின் வழியில் நடக்கவில்லை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT